search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கத்தில்"

    • அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் 2016-ம் ஆண்டு முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகும்.
    • வருகிற செப்டம்பர் 17-ந் தேதி இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடை பெற்ற முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் அமைந்தது.

    இந்த நிலையில் அமைப்பின் 58-வது ஆண்டு விழா, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா மற்றும் பெரியாரின் பிறந்தநாள் விழாஆகியவை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 250 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் மாநில தலைவரும் ரத்ததான முகாம் ஒருங்கிணை ப்பாளருமான வக்கீல் முகேஷ் குமார் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 2பேர் ரத்ததானம் வழங்கி ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×