search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாடிய குழந்தைகள்"

    • திட்டக்குடியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை நாய் கடித்து குதறியது.
    • குழந்தையை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30) இவர் மனைவி கீதா (27) மகன் சர்வேஷ் (4) பக்கத்து வீட்டு சிறுமி தீபா (15) ஆகியோர் வீட்டுக்கு முன்பு விளையாடி கொண்டு இருந்தனர். குழந்தைகளை தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய் திடீரென குழந்தை சர்வேஷ் முகம், கை பகுதியில் கடித்து கொதறியது. இவரை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது. சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டு சிறுமி தீபாவையும் வெறிநாய் தொடர்ந்து கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர்.

    இதுபோல் தொடர்ந்து வெறி நாய்கள் கடிப்பதால் பெரியார் நகர் பகுதி மக்கள் தெருக்களில் அச்சத்துடன் நடமாட வேண்டி சூழ்நிலையில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும் .அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அணைவரும் நடமாட முடியும் என கூறினர் . பெரியார் நகரில் தெருநாய் குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×