என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளம்பரபதாகை"
- 50-வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- புத்தேரியை சேர்ந்த சகாயம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அவரை வரவேற்கும் வகையில் நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டிருந்தது. ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விளம்பரப்பதாகைகள் வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு விளம்பர பதாகைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் கெபின்ஜாய் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு மாநில செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான புத்தேரியை சேர்ந்த சகாயம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் வடசேரி சந்திப்பில் விளம்பர பலகைகள் வைத்திருந்ததாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சகாயம், நாகர்கோ வில் மாநகராட்சி 50-வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்