search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவில் திறப்பு"

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36½ கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36½ கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்துக்கு அருகில் ரூ.18 கோடியே 10 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொலிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக திறப்பு விழா நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் மின் இணைப்பு மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளால் தாமதமாகி போனது.

    இந்தநிலையில் 98 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தார்.மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உடனிருந்தனர். பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள், உணவகம், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளை ஒவ்வொன்றாக மேயர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.ஆய்வு குறித்து மேயர் தினேஷ்குமார் கூறும்போது, 'பஸ் நிலைய திறப்பு விழா விரைவில் நடைபெறும். இறுதிகட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 98 சதவீதம் நிறைவடைந்து விட்டது என்றார்.

    • நீர்மட்டம் 43 அடி உயர்வினால் கோமுகி அணையில் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.
    • விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணை மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசனமும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது இதனால் அணையில் வெறும் 15 அடி மட்டும் தண்ணீரை நிலத்தடி நீர்மட்டம் ஊறுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தை மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள கல்படை, மல்லிகைப்பாடி, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி வரை நீர் வரத்து வந்ததால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. தற்போது நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வெகு விரைவில் அணையில் இருந்து த ண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ×