search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகளை மீறிய"

    • வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 4.32 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
    • 10 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் வாகன விதிமுறைகளை மீறுவதால் பல்வேறு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    எனவே இதனை கண்காணிக்க ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த ஏப்ரலில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 54 பேர் மீதும், செல்போன் பேசியப்படி வாகனம் இயக்கியதாக 3 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 594 பேர் மீதும் என மொத்தம் 851 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ரூ. 4.32 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    லைசென்ஸ் ரத்து

    குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 9 பேர், அதிவேகமாக சென்ற ஒருவர் என 10 பேர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    ×