என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதவை பெண்"
- இளம் பெண்ணின் செல்போன் என்னை வாங்கிவிட்டு இரவு நேரங்களில் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள விகார பாத், பீரன் செருவு பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார்.
இதனால் இளம் பெண் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். இளம் பெண் வேலைக்குச் சென்று வரும்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமித் குமார் சர்மா (33) என்பவர் இளம் பெண்ணை பின் தொடர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். எப்படியோ இளம் பெண்ணின் செல்போன் என்னை வாங்கிவிட்டு இரவு நேரங்களில் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இளம் பெண் வேலைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பாச்சுபள்ளியை சேர்ந்த கார் டிரைவர் சுபம் சர்மா (29) என்பவருடன்சுமித் குமார் சர்மா காரில் சென்று இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டுக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்றனர்.
அங்கு வைத்து இளம் பெண்ணிற்கு வாயில் மதுவை ஊற்றினர். இதனால் இளம்பெண் மயக்கம் அடைந்தார். அப்போது இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கார் டிரைவர் சுபம் சர்மா மற்றும் சுமித் குமார் சர்மா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்