search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம் வினியோகம்"

    • வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை கண்டறிந்து சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை
    • கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியினை கண்காணிப்பு அலுவலரும். கூடுதல் பதிவாளரும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனருமான எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை நேரில் கண்டறிந்து சேமிப்பு கணக்கு துவக்கிட உரிய விண்ணப்பம் அளித்து அவர்களுக்கு அடுகில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் இல்லாமல் "ஜீரோ பேலன்ஸ்" என்ற அடிப்படையில் உடனுக்குடன் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் துவக்கி கொடுக்குமாறும் ஆம்பூர் சரக களமேலாளர் சி.சுப்பிரமணி, திருப்பத்தூர் வங்கி கிளை உதவியாளர் எம்.மஞ்சுநாத் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் . கூட்டுறவு சார்பதிவாளரும் , ஆம்பூர் சரக அலுவலருமான எம்.கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×