search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுப்பு"

    • கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது
    • வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில், அக்.3-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களும் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாக னங்கள் வாங்குமாறு நிர்பந் திக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதன் காரணமாக ஒரு சில கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டது.

    அதே சமயம் பல வங்கிகளில் ஒரு சில பணியாளர்களுடன் இயங்கியது. பணியாளர்கள் போராட்டம் காரணமாக பணிகள் முடங்கின. கடந்த 2 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு கூட்டுறவு வங்கிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா உள்பட பலர் இணை பதிவாளர் அலுவலகம் முன் திரன்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×