search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடிய கொட்டி தீர்த்த கன மழை"

    • நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
    • கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் வேப்ப னப்பள்ளி,குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகிரி,அத்திமுகம் தீர்த்தம், நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    மேலும் கனமழையால் இப்பகுதிதில் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×