என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விஜயதரணி எம்எல்ஏ
நீங்கள் தேடியது "விஜயதரணி எம்எல்ஏ"
மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் சுய சிந்தனையுடன் தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் விஜயதரணி எம்எல்ஏ பேசினார்.
நாகர்கோவில்:
விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட அருமனை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கம்ப்யூட்டர்களை விஜயதரணி எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
புதிய கண்டுபிடிப்புகளை நம் மாணவர்களும் உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் சுய சிந்தனையுடன் தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சி மனப்பான்மையை தனதாக்கி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் புதிய புதிய புத்தகங்கள் அறிவு தேடல்களை படித்து ஆராய்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.
மாணவர்கள் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கீழ் படிதல், சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் நன்கு விளையாடி உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும். இரக்க சிந்தனையோடு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மோகனன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சாந்தப்பன் நாயர், கமலன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதிஸ்குமார், அருள்ராஜ், சுரேஷ், ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X