search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரிப்பு"

    • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிப்பு

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள குன்னத்தூர் நாட்டுவள்ளி என்ற இடத்தை சேர்ந்த அபிலாஸ் தனது காரில் காப்புக்காடு-ஓச்ச விளை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கடை கூம்பற விளையைச் சேர்ந்த ஜாண்றோஸ் மகன் அஸ்வின் (வயது 21) மெது கும்மல் வாறுத்தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் மகன் ஜினோ (21) ஆகியோர் காயமடைந்தனர். ஜினோ நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியிலும், அஸ்வின் மார்த்தாண்ட த்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியிலும் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அபிலாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×