search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகம்"

    • கோடியக்காடு அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் அமைந்துள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் அமைந்துள்ளது.

    இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு வைகாசி மாதம் விசாகப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நடைப்பெற்றது. முன்னதாக சுப்பிமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம செய்யபட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதானை நடைபெற்றது.

    பின்பு பல்லக்கில் முருகன் எழுந்தருளி கோடியக்காடு தியாகராஜ சிவச்சாரியர் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஒத திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வேதாரண்யஸ்வரர் கோயில் அலுவல்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதார்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×