search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபால் தோ்வு போட்டி"

    • வாலிபால் போட்டி திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
    • மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.ராஜகோபால் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாநில அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தோ்வு போட்டி சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டியில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×