என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாணியம்பாடி கொள்ளை"
வாணியம்பாடி:
வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபட்டார்.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் நதீம் தோல் வியாபாரி. மற்றும் குடும்பத்தினர் வாணியம்பாடி நியூ டவுனில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.
பெங்களூரில் இருந்து திரும்பிய அப்துல்சமத் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது பற்றி வாணியம்பாடி டவுன் போலீசஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் வீட்டின் அருகில் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் கொள்ளை நடந்தது வாணியம்பாடி போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது.
போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்