search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ் அப் குரூப்"

    • சின்னசேலம் பகுதியில் கலவரக்காரர்களை ஒருங்கிணைத்த 4 வாட்ஸ் அப் குரூப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17-ந் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்த 'வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பியவர்கள் என பலரை யும் போலீசார் தேடி கைது செய்து வருகின்றனர். துவரை 4 'வாட்ஸ் ஆப்' குரூப்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்ற குழுவில் 518 பேர், 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என்ற குரூப்பில் 508 பேர், ஹியூமனாட்டி என்ற குரூப்பில் 371 பேர், மற்றொரு குரூப்பில் 250 பேர் என 4 குரூப்களில் 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதில் கலவரத்தில் பங்கேற்றவர்களின் நபர்களை கண்டறியும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    ×