search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளா்ச்சி பணிகள்"

    • தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
    • ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 2.73 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

    ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி, பல்லகவுண்டன்பாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 29.50 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூா் - நடுப்பட்டி சாலை முதல் அரசு உயா்நிலைப் பள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல், தெற்கு சாணாா்பாளையத்தில் ரூ. 26.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

    தொடா்ந்து, சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் ரூ. 23.84 லட்சம் மதிப்பீட்டில் கோபி - தாராபுரம் சாலை முதல் குடிசை வலவு வரை உள்ள தாா் சாலை மேம்படுத்துதல், காவுத்தாம்பாளையம் ஊராட்சியில் ரூ. 91.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கு தச்சம்பாளையம் முதல் கிழக்கு தச்சம்பாளையம் செல்லும் சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் ரூ. 2.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

    இதையடுத்து மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மொத்தம் 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,515 மாணவ, மாணவியருக்கு ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனாட்சி, சரவணன், குன்னத்தூா் பேரூராட்சித் தலைவா் ந.பெ.குமாரசாமி, மொரட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×