search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லநாடு"

    • தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் , ராக்கேஷ் என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் நடந்திய விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு நான்கு வழிச்சாலை பகுதியில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் (வயது25), ராக்கேஷ் (19) என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.  

    ×