என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருவாய்"
- இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
- இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது
விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.
மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
- மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.
இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.
இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.39 கோடி கிடைத்துள்ளது.
- உண்டியல் எண்ணும் பணியில் ஆன்மீக பணியாளர்கள் ஈடுபட்டள்ளனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாதந்திர உண்டியல் வருவாய் எண்ணும் பணி நேற்று காலையில் அம்பாள் சன்னதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் பா.பாஸ்கரன் தலைமையில் தொடங்கியது.
இதில் உண்டியல் வருவாயாக ரூ. 1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து ரூ 935-ம், 216 கிராம் 200 மில்லி கிராம் தங்கம், 9 கிலோ 515 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் அ.பிரபாகரன், பேஸ்கார்கள் பஞ்சமூர்த்தி, கமலநாதன் மற்றும் உளவார ஆன்மீக பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டள்ளனர்.
- அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும்
- மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார்
பல்லடம்:
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு குறித்து சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்லடம் நகராட்சி ஆணையாளர், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டார பகுதியில் அதிக விபத்துக்கள் நேரும் இடங்களை பார்வையிட்ட அவர் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பல்லடம் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுப் பணிக்கு வந்த சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே தாலுகா அலுவலகத்தில் இருந்த பழைய குப்பைகளை தீ வைத்து எரித்தனர். அதில் பொது மக்களின் மனுக்களும் இருந்ததாக சிலர் கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுகள் குறித்து பல்லடம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
- அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
- கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது
திருப்பூர்,ஜூலை.7-
அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் இயக்கம் துவங்கும் போதெல்லாம் திரையில் வரும் தகவல் சேனலில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் வாயிலாக வருவாய் ஈட்ட கேபிள், டி.வி., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கேபிளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி, ஆன் செய்யப்படும் போதெல்லாம், லேண்டிங் சேனல் எனும் அரசு கேபிள் தகவல் சேனல் ஒளிபரப்பாகும்.
அதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், முதல்வரின் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு, கேபிள் டி.வி., தொடர்பான தகவல், பொது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை ஒளிபரப்பாகும்.
இந்தநிலையில் இந்த தகவல் சேனலில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதில் கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப விளம்பரம் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதன் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். முதலில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாட்டர் ஆப்பிள் இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.
- 1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.
நாகப்பட்டினம்:
கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் அளவில் வளரக்கூடிய ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'வாட்டர் ஆப்பிள்'.
ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியாவாகும்.
இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.
குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்திரபோஸ் என்பவர் சோதனை முறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நர்சரியிலிருந்து கன்றுகள் வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தார்.
தற்பொழுது கொத்து கொத்தாக காய்க்க தொடங்கி உள்ளது.
ஆண்டுக்கு மூன்று முறை காய்க்கும் வாட்டர் ஆப்பில் ஒரு செடியில் வாரத்திற்கு 100 கிலோவிற்கும் மேலாக அறுவடை செய்து வருவதாகவும் அருகிலுள்ள பரவை சந்தையில் கொண்டு விற்பனை செய்யப்படும் வாட்டர் ஆப்பில் இங்கிருந்து திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.
1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.
மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய செடிகளை மானிய விலையில் வழங்கினால் மேலும் இப்பகுதியில் மாற்று சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
- 3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல ஏதுவாக திருப்பூரில் இருந்து 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக பண்டிகைக்கு 3நாட்கள் முன்பே பஸ் இயக்கம் துவங்கியது. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் தான் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்தஊர் சென்றவர் திருப்பூர் திரும்ப ஏதுவாக 25 முதல், 27-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலம் 7 நாட்களில் ரூ. 64.50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக கோவை கோட்ட போக்குவரத்து துறை வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
- பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடி கிடைத்துள்ளது.
புதுடெல்லி
நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.
பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.
பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்