search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revenu"

    • வாட்டர் ஆப்பிள் இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.
    • 1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.

    நாகப்பட்டினம்:

    கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் அளவில் வளரக்கூடிய ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'வாட்டர் ஆப்பிள்'.

    ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியாவாகும்.

    இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.

    குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்திரபோஸ் என்பவர் சோதனை முறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நர்சரியிலிருந்து கன்றுகள் வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தார்.

    தற்பொழுது கொத்து கொத்தாக காய்க்க தொடங்கி உள்ளது.

    ஆண்டுக்கு மூன்று முறை காய்க்கும் வாட்டர் ஆப்பில் ஒரு செடியில் வாரத்திற்கு 100 கிலோவிற்கும் மேலாக அறுவடை செய்து வருவதாகவும் அருகிலுள்ள பரவை சந்தையில் கொண்டு விற்பனை செய்யப்படும் வாட்டர் ஆப்பில் இங்கிருந்து திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.

    1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.

    மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய செடிகளை மானிய விலையில் வழங்கினால் மேலும் இப்பகுதியில் மாற்று சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×