search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி வசூல்"

    • நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 
    • முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்களை நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.

    காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலா்கள் 4வது வாா்டுக்கு உட்பட்ட சத்திரம் வீதி, முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 50 வீடுகளில் சொத்துவரி, குடிநீா்க் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலானது. நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், கவுன்சிலா் இப்ராஹிம் கலிலுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • ராஜபாளையத்தில் நடைமுறைக்கு வராத தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
    • இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயவாளர் மாரியப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

    தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சதவீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறுவதற்கு 11.7.2016-ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

    அந்த தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்டணத்தை மாற்றியமை த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 சதுரஅடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150/- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அந்த தீர்மான த்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் ராஜபாளை யம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்திருப்பதை யொட்டி மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை 1.4.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.

    இது குறித்து பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் 21.7.2022-ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.100 எனவும், அதற்குமேல் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.150 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றியது.

    தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றிய மைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு முன் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே தாங்கள் தலையிட்டு தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகராட்சி திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.
    • கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வரி நிலுவை மற்றும் திருத்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை, சேவை கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கடந்த 8 நாட்கள் தினமும் ரூ.8 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது.

    இந்த மாநகராட்சியை பொருத்தமட்டில் சொத்து வரியின் மூலமாக மட்டும் வருடத்திற்கு ரூ.138.90 கோடி எட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வரி நிலுவைத் தொகை ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்து விட்டதால் மாநகராட்சி பராமரிப்பு மற்றும் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

    திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வரி வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

    அதன் பிறகு ஜூலை 29-ந்தேதி முதல் இந்த மாதம் 5-ந்தேதி வரை சொத்து வரி, மாநகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் மற்றும் சேவை கட்டணங்கள் மூலம் ரூ.8 கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திருத்தப்பட்ட வரி உயர்வும் ஒரு காரணியாகஉள்ளது.

    மாநகராட்சி கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் மாதாந்திர வாடகையை உயர்த்த தற்போது மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

    இது உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் வளர்ச்சியை மேம்படுத்தும். கிழக்கு புலிவார் ரோடு பகுதியில் வரி நிலுவை வைத்துள்ள காரணத்துக்காக ஒரு தியேட்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×