search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகவரித்துறை அதிகாரி"

    • சிவக்குமார் கடலூரில் வணிகவரித்துறை துணை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
    • தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் வலது நெற்றி மூக்கு பகுதியில் தாக்கினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் இருவேல் பட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மகன் சிவக்குமார் ( 41). இவர்,கடலூரில் வணிகவரித்துறை துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடலூரில் இரவு பணி முடித்துவிட்டு தனியார் பஸ்சில் கடலூரில் இருந்து பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார் பஸ்சில் இருந்து இறங்கிய போது பண்ருட்டி பூங்குணத்தை சேர்ந்த வெற்றிவேல்( 22 ) இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை எடுத்துள்ளார் .

    ஏன் எனது பாக்கெட்க்குள் கைவிட்டு பர்சைஎடுக்கிறாய் என்று சிவக்குமார் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல்வணிக வரித்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் வலது நெற்றி மூக்கு பகுதியில் தாக்கினார். இதில் ரத்தம் கொட்டியது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவக்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வணிக வரித்துறை அலுவலர் சிவக்குமார் கொடுத்த புகாரில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து வாலிபர்வெற்றி வேலை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ×