search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசந்த உத்சவம்"

    • உற்சவ பெருமாள் பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி அருள் பாலித்து வந்தார்.
    • பெருமாளுக்கு பழ வகைகள் சமர்பணம் செய்து பூஜை நடை பெற்றது.

    ஏர்வாடி:

    பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் 57-வது திவ்விய தேசமாக குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் இருந்து வருகிறது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் சுந்தரேச பரிபூர்ண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோ விலில் கோடை உத்சவ விழா நடை பெற்று வந்தது. தாயாரு டன் உற்சவ பெருமாள் பட்டு பீதாம்பரம் இல்லாமல் மிக எளிய பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி தினமும் அருள் பாலித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெருமாள் தாயா ருடன் குலசேகர மண்ட பத்தில் எழுந்தருளினார். திருக்கு றுங்குடி ஜீயர் சுவாமிகள் பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்தார். அதன் பின்பு பல்வேறு பழ வகைகள், நெய்வேத்தி யங்கள் பெருமாளுக்கு சமர்பணம் செய்து அர்ச்சகரால் அலங்கார பூஜை நடை பெற்றது. அதன் பின்னர் தோளுக்கு இனியன் பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோடை கால வசந்த உத்சவம் சிற ப்பான முறையில் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவின் கைங்கே ரியம் மற்றும் மங்கள செல விளங்கள் ஊர் பொது மக்கள் சார்பாக நடை பெற்றது.

    ×