search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கேசியர் தற்கொலை"

    திருவாரூர் அருகே கையாடல் செய்த பணத்தை கட்ட முடியாததால் வங்கி கேசியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வைப்பூரை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 56). இவர் சோளங்கநல்லூரில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வங்கி பணம் ரூ.2½ லட்சத்தை கையாடல் செய்ததாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 19-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி வழங்கிவிட வேண்டும் என்று அதிகாரிகள் கெடு விதித்திருந்தனர். ஆனால் அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டார். 

    அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றி அய்யா பிள்ளையின் மகன் தமிழன்பன் வைப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×