search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு"

    • எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசா ரணை நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதாக இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்தும் இந்திய பார் கவுன்சிலிடமோ, சட்டத்துறை சார்ந்தவர்களி டமோ எந்த ஆலோசனையும் பெறாமல் எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேலும் நீதிமன்றத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை மாவட்ட நீதி மன்றம் அருகே அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்கு மார், செயலாளர் உதயகு மார், இணைச் செயலாளர் கண்ணன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

    • இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வக்கீல் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வக்கீல் திருமுருகன் என்பவர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் நேற்று வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தை சார்ந்த வக்கீல் திருமுருகன் மீது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் பொய்யான முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து ஒரு சார் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்.

    இதனை கண்டித்தும் வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத வக்கீல் திருமுருகனின் மீது புனையப்பட்ட பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கொடைக்கானல் வக்கீல் சங்கத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கோர்ட்டு பணிகளில் இருந்து தொடர்ச்சியாக விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×