search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைகா கோவை கிங்ஸ்"

    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • திருச்சி அணியின் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

    இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
    • அதிரடியாக ஆடிய ஹரி நிஷாந்த் 36 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்தார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். சுரேஷ் குமார் 37 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னும், ஷிஜித் 30 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அணியின் எண்ணிக்கை 100 ஆக இருந்தபோது ஹரி நிஷாந்த் 60 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விவேக் 10 பந்தில் 3 சிக்சர் உள்பட 22 ரன் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிரதீப் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    • லைகா கோவை கிங்ஸ் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது சுரேஷ் குமார் 37 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஷிஜித் சந்திரன், முகிலேஷ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. ஷிஜித் 30 ரன்னில் அவுட்டானார்.

    முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    ×