search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெனினிஸ்ட்"

    • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டும்
    • அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் 4 வது மாநாடு நாளை (சனிக்கிழமை) குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டப சாரு மஜும்தார் நினைவகத்தில் நடக்கிறது. காலை 10 மணிக்கு ஜஸ்டின் சுந்தர் மாநாடு கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

    கடலோர பகுதி செயலாளர் நஸ்ரேன் பெர்னார்ட் வரவேற்று பேசுகிறார். நிர்வாகிகள் சுசீலா, மேரி பிளவர், விஜயா முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் என்.கே.நடராஜன் மாநாடு துவக்கவுரை ஆற்றுகிறார்.

    குமரி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து மாநாடு அறிக்கை வாசிக்கிறார்.மாநிலக் குழு உறுப்பினர் சிம்சன் நிறைவுரை ஆற்றுகிறார்.நிகழ்ச்சியை நிர்வாகிகள் சூசை மரியான், கார்மல், அர்ஜூனன், ஞானசெல்வம், சியாமளா, வக்கீல் ஐயப்பன், கணபதி, தங்கலட்சுமி, எஸ்டின், செல்வராஜ், ரவி, அனிற்றா பிரின்ஸி, ஜெமிலா ஜெனட், மாசிலாமணி, மார்டின் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.கிள்ளியூர் ஏரியா கமிட்டி செயலாளர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் தமிழ்நாட் டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டுவது, அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டுவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    ×