search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோந்துப் பணி"

    • ரோந்துப் பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற் றும் போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமய் யர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்த முயன்றனர். அவர் மோட்டார் சைக்கிளை ரோட்டிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதையடுத்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் தப்பி ஓடியவர் பொட்டிநாயுடு தெருவில் இருந்து மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீ சார் வந்தவாசி 5 கண் பாலம் அருகில் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த திலீப் (வயது 23) என்பது தெரி யவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.

    • பகண்டைகூட்ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மையனுாரில் சாராயம் விற்ற பிச்சை(39), அதேபோல் தொண்டனந்தலில் சாராயம் விற்ற ராஜசேகர் மனைவி செல்வி(30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×