search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டோரம் இறங்கி"

    • பஸ் இருசக்கரவாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.
    • பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வழியாக நல்லூர் சத்திய மங்கலம் ரோட்டில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். தொடர்ந்து அவர் ரோட்டின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பஸ் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார்.

    அப்போது கட்டுப பா ட்டை இழந்த பஸ் எதிர்பா ராத விதமாக ரோட்டை விட்டு கீழே இறங்கி இழுத்து சென்றது. இதையடுத்து அந்த பஸ் ரோட்டோரம் சிறிது தூரம் சென்று மோதி நின்றது. இதை கண்டு பஸ்சில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    மேலும் விபத்தில் பஸ்சின் முன் பகுதி மற்றும் பின் பகுதி சேதம் அடை ந்தது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதையடுத்து கிரைன் எந்திரங்கள் வரவழைக்க ப்பட்டு அதன் மூலம் பஸ்வை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×