search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டரி கிளப்"

    • நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி ரோட்டரி கிளப் வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ் வரவேற்று பேசினார். இந்த ஆண்டிற்கான புளியங்குடி ரோட்டரி கிளப்பின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன், செயலாளராக ஜோசப் அமல்ராஜ், பொருளாளராக முருகையா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆறுமுகப் பாண்டியன் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ரோட்டரி கிளப்பின் நோக்ககத்தினையும் கிளப்பின் மூலம் செய்த சாதனைகளையும் விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற புளியங்குடி எஸ்.டி.ஏ. பள்ளி மாணவன் ஆதித்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி தீக்க்ஷா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கிளப் சார்பில் பள்ளிகளுக்கு மைக்ரோஸ்கோப், பீரோ, மின் விசிறி, தையல் மிஷின், மாணவ- மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜேம்ஸ் ஆரோக்கிராஜ் நன்றி கூறினார்.

    ×