search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபிஸ் தடுப்பூசி"

    • திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் நோய் தாக்கிய நாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, முகமது ஹனிபா, ரெங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் நகரில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை ஆப்ரேஷன் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள ப்படவில்லை. இதனால் நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் பெருகி உள்ளது. கருத்தடை ஆபரேஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள மை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராணிகள் நலச் சங்க செயலாளர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது.
    • திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நாய் கடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும் கவுன்சிலர்களும் நாய்கள் தொல்லை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×