search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ பட்ஜெட்"

    • சீனாவின் ராணுவ பட்ஜெட் இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
    • கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதி சச்சரவு 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது

    வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அண்டை நாடான சீனா, பொருளாதார சூழல் நலிவடைந்துள்ள நிலையிலும் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்துள்ளது.

    தற்போது அமெரிக்காவிற்கு அடுத்து மிக பெரிய தொகையை ராணுவத்திற்கு செலவிடும் நாடாக சீனா உள்ளது.

    இதனால், சீனாவின் ராணுவ பட்ஜெட் தொகை $230 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த தொகை இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தொகையை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனாவின் ராணுவ தரைப்படையில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

    தைவானை தனது நாடாக கூறி வரும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இப்பின்னணியில், ராணுவ பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.

    இந்திய கடல் (Indian Ocean) பகுதியில் ராணுவ மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீனா எடுத்திருக்கும் இந்த முடிவை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதியில் ஏற்பட்ட சச்சரவு தொடங்கி 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.


    இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6.2 லட்சம் கோடி தொகையில் 28 சதவீதம் மட்டுமே ராணுவத்தை நவீனப்படுத்த செலவிடப்பட உள்ளது. மீதமுள்ள தொகையில் பெரும்பகுதி ஊதியம் மற்றும் பென்சன் தொகைக்காகவே செலவிடப்படுகிறது.

    கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் சீன பொருளாதாரம் பிற நாடுகளை போல் வளர்ச்சி அடையாமல் மந்தமடைய தொடங்கியது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் அந்நாட்டில் இள வயது ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தம்பதியர் குழந்தை பெற்று கொள்வதற்கு தயங்கி வருகின்றனர்.

    இந்த நெருக்கடிக்கு இடையிலும் சீனா ராணுவ பலத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளை கை விடவில்லை.

    • ராணுவத்திற்கு இதுவரை குறைந்த அளவே சுவிட்சர்லாந்து செலவு செய்தது
    • ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து இணையவில்லை

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகித்து வந்தது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் உலகில் நடைபெற்ற போர்களில், சுவிட்சர்லாந்து எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

    இதனால் அந்நாடு உலக நாடுகளில் "நியூட்ரல்" சுவிட்சர்லாந்து என அழைக்கப்பட்டது.

    அமைதியை விரும்பும் நாடாக போரில் ஈடுபடாமல் தொடர்ந்து இருந்து வந்ததால், ராணுவத்திற்கு இதுவரை சுவிட்சர்லாந்து மிக குறைந்த அளவே செலவு செய்து வந்தது.

    சமீப சில வருடங்களாக உலகில் நடைபெறும் போர்களினால் அதிகரித்துள்ள அமைதியின்மை பல நாடுகளுக்கு போர் குறித்த சித்தாந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போர்கள் சுவிட்சர்லாந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுவிட்சர்லாந்தின் ராணுவ அமைச்சர் வயோலா அம்ஹர்ட் (Viola Amherd) தெரிவித்ததாவது:

    அடுத்த 4 வருடங்களில் ராணுவ செலவினங்களுக்கான பட்ஜெட் 19 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

    கடந்த 30 வருடங்களாக ராணுவ செலவினங்களை குறைத்து வந்துள்ளதால் நாட்டின் ராணுவத்தின் வலிமை குறைந்துள்ளது. இழந்த வலிமையை மீட்டு எடுக்க சில ஆண்டுகளாகும்.

    அடுத்த 12 வருடங்களில் ராணுவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த உள்ளோம். இந்த அணுகுமுறை தற்போதுதான் முதல்முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்வாறு வயோலா கூறினார்.

    ஐரோப்பிய கண்டத்தில் இருந்தாலும், 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில்  (European Union) சுவிட்சர்லாந்து இணையவில்லை.

    அதிகமாக ஒதுக்கவுள்ள நிதியால், ரேடார் அமைப்புகளை மேம்படுத்துதல், குறைந்த தூர ஏவுகணைகளை உருவாக்குதல், ராணுவ டேங்குகளை அதிகரித்தல், சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்குதல் என பல திட்டங்களை சுவிட்சர்லாந்து செயல்படுத்த உள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் நடுநிலைமை வகிக்க முடிந்த சுவிட்சர்லாந்திற்கு, ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய 2 போர்களால் நாட்டின் எதிர்கால திட்டங்களையே மாற்ற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×