search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகு கேது"

    திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதசாமி, கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான், நாக கன்னி, நாக வள்ளி ஆகிய 2 துணைவிகளுடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும்.

    நவக்கிரக பரிகார தலங்களில் நாகநாதசாமி கோவில், ராகுவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் ராகு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராகு பகவான் நேற்று மதியம் 1.24 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நேற்று கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 11-ந் தேதி இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2, 3-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடானது.

    அப்போது ராகு பகவானுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து புனித நீரால் கட அபிஷேகம் நடந்தது. பெயர்ச்சி நேரமான 1.24 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து ராகுபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேதுபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். கேதுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.

    அதன்படி நேற்று கேது பகவான் மதியம் 2.04 மணிக்கு மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் பெயர்ச்சி அடைந்தபோது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    ராகு பரிகார தலமான கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இன்று பிற்பகலில் பெயர்ச்சி அடைகிறார்.

    இதையொட்டி ராகு பரிகார தலமான கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் இன்று காலை ராகு பகவானுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் அருள்பாலித்த ராகு பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு யாகம் நடைபெற்றது.
    ‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    ‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

    வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக்குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்யபீடத்தில் 75க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

    அவற்றுள் ராகு - கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு - கேதுவாக தரிசனம் தரும் இந்த ராகு - கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும். இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

    ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

    பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

    குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 13.02.2019 புதன்கிழமை அன்று கடகம் ராசியிலிருந்து இருந்து மிதுனம் ராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் மகரம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்சி செய்கிறார்.

    அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.

    இந்த முறையும், பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் இன்று சிறப்பு ராகுகேது யாகமும், சிறப்பு அபிஷேகமும் விமரிசையாக நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சிறப்பு யாகம் 12 மணி வரை நடைபெறுகிறது.

    அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் :

    ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு-கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. அனைவரும் பங்கேற்று பலன் பெற பிரார்த்திக்கின்றோம்.

    யாகத்தின் பலன்கள் :

    திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

    குறிப்பு :- வருகிற 09.03.2019 சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க பிரகாரம் ராகு-கேது பெயர்ச்சி யாகம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
    நாகர்கோவில் அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு லட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு முதல் கால பரிகார அர்ச்சனை அலங்கார பூஜையும், 10.30 மணிக்கு 2-ம் கால பரிகார அர்ச்சனை அலங்கார பூஜையும், 1 மணிக்கு பெயர்ச்சி நேர பூஜையும் நடக்க இருக்கின்றன. மாலை மற்றும் இரவில் அபிஷேக அலங்கார பரிகார பூஜை நடைபெறுகிறது.

    ராகு-கேது தரிசனத்துக்கு குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி பக்தர்கள் சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    ×