search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி என்கவுண்ட்டர்"

    • 3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாசென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார்.
    • காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட திருப்பந்தியூர் கிராமத்தில் பதுங்கி இருந்த ரவுடி குள்ள விஷ்வா போலீசாரின் என் கவுண்டருக்கு பலியானான்.

    ரவுடி விஷ்வாவை பிடிக்கச் சென்றபோது போலீசாரை வெட்டியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி விஷ்வா உயிரிழந்து விட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடியான குள்ள விஷ்வா மீது 3 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனங்களை மிரட்டி விஷ்வா மாமூல் வாங்கி வந்ததாகவும் இதுதொடர்பான மோதல் காரணமாகவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற ரவுடி விஷ்வாவின் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசியபடியே சுட்டு விடவா? என்று கேட்கும் மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாவுடன் சென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து போலீசுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    போலீஸ் நிலையத்தில் வைத்து விடுக்கப்பட்ட இந்த என்கவுண்டர் மிரட்டலால் கடும் அதிர்ச்சி அடைந்த குள்ள விஷ்வா அது தொடர்பாக உடனடியாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது வழக்கில் பிடிவாரண்டில் ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ரிமாண்ட் செய்யப்பட்டேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிணை பெற்றேன்.

    நான் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை. எனது பிணை மனுவை ரத்து செய்யச் சொல்லி காவல் துறையினர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி வழக்கு போட்டனர்.

    நான் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி முதல் சிவகங்கையில் தங்கி அந்த காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன். ஆனாலும் எனது பிணை மனு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். எனது வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நான் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கடந்த மாதம் 1-ந்தேதி அன்று உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் நகல் கோரி எனது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில காரணங்களால் அந்த நகல் 24-ந்தேதி அன்று கிடைத்தது.

    அந்த நகலை வழக்கறிஞரிடம் இருந்து நான் 26-ந்தேதி பெற்றுக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் 27-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதூர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டேன்.

    28-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கு நான் கையெழுத்தட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் காவல் துறையினர் என்னை காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைத்தனர்.

    காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர். காவல் துறையினரின் சிறப்பு படையினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காவல் ஆய்வாளரிடம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்ன செய்வது என்று கேட்டார்.

    அப்போது அவர் கையெழுத்து வாங்கவா 'சுட்டு விடவா' என்று கேட்டார். இதனால் நான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். தயாளன் ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய வீடியோ ஆதாரம் உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னை சுட்டு விடலாமா? என சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆய்வாளரிடம் பேசியதில் இருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன்.

    எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட காவல் துறையினரே பொறுப்பு என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே என்னை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்.

    இவ்வறு அந்த புகாரில் ரவுடி விஷ்வா கூறியிருக்கிறார்.

    இந்த கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுட்டுக்கொல்லப்பட்டு உள்ள விஷ்வா, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வயலூர் கிளாஸ் கிராமத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அவர் எழுதி உள்ள கடிதத்தில், என்மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.

    காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ×