search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தம் சேகரிப்பு வாகனம்"

    • வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அரசு ரத்த மையங்களுக்கான ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனம் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாகனத்திற்குள் பிரதமர் மோடி இடம் பெற்ற திட்டம் குறித்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. வாகனத்திற்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் கலெக்டர் உமா அதை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் சாந்தா அருள்மொழி, டாக்டர், ஊழியர்களிடம் அகற்றுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பிரதமர் உருவப்படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×