search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபிஐ"

    • இந்தியாவில் செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது

    புதுடெல்லி:

    யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 678 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி - யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில், ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    2022-ம் நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. அதாவது அதன் மதிப்பு ரூ.84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

    இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
    • கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன.

    இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும், இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜூலை மாதத்தில் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது, இது 2016-ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இவரது பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மேடி, " இது ஒரு சிறந்த சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியை இது குறிக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன" என்று குறிப்பிட்டார்.

    ×