search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாத்திரை பந்தல்"

    • பா.ஜ.க.வின் என் மண் என் மக்கள் யாத்திரை பந்தல்கால் நடும் விழா நடந்தது.
    • 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.

    கீழக்கரை

    தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுத்து பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து பா.ஜ.க. மாநிலத்த–லைவர் அண்ணாமலை தலைமையில் 'என் மண், என் மக்கள் யாத்திரை' வருகிற 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

    இதனையொட்டி, ராமே–சுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடை–பெற்றது. மாவட்டத் தலை–வர் தரணி ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன் னிலையில் பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பவர் நாகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி–மாறன், ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், சங்கிலி, ஞான–குரு, கதிரவன், அரசம்மாள், செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கருப்பு முருகானந்தம் நிரு–பர்களிடம் கூறியதா–வது:-

    வரும் 28-ந்தேதி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக அமையவுள்ளது. பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, அரசியல் மாற்றத்திற்கான ஒரு யாத்தி–ரையை ராமேசுவரத்தில் இருந்து தொடங்க உள்ளர். என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை துவக்கி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 28-ந்தேதி மாலை ராமேசுவரம் வருகை தர உள்ளார். இந்த யாத்திரையில் பங்கெடுப்பதற்கு பல லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு வர உள்ளனர். ராமநாதபுரம் மண் தேசியத்திற்கும், தெய் வீ–கத்திற்கும் உறு–துணை–யாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மட்டும் லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

    அதற்கான பணியை துவங்கி உள்ளோம். அனைத்து குக்கிராமத்தில் இருந்து பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த யாத்திரை தொடக்கமே அரசியல் மாற்றத்தத்தை ஏற்படுத்தும். யாத்திரை நிறைவடையும் போது தமி–ழகத்தில் பா.ஜ.க. ஒரு அசைக்க முடியாத கட்சியாக என்ற நிலை ஏற்படுத்தும். 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.

    ×