search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாசகம் பெறுவோர்"

    • மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்
    • பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் யாசகம் பெறுபவர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டப்படுகின்றன. இந்த அறைகள் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே கட்டப்பட இருக்கிறது. இந்த கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பஸ் நிலையம் முழுவதும் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பி ரமணியன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×