search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை சேதம்"

    • ராமநாதபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலை சேதமடைந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகியில் சுடலை மாடன் சுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை நாளில் விழா நடந்து வந்தது. இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் விழா எடுப்பதில் சிக்கல் எழுந்தது.

    இதனால், இவர்களில் ஒருவரான மாடசாமி என்பவர் தனது உறவினர்களுடன் பிரிந்து சென்று புதியதாக கட்டிய கோவிலுக்கு வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது புதிய கோவில் சேதப்பட்டு கிடந்தது. இது குறித்து புதிய கோயில் பூசாரி மாடசாமி கூறுகையில், சுடலை மாடன் சுவாமி கோயிலில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து விலகி எனது பட்டா நிலத்தில் புதிய கோவில் கட்டி, வரும் 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளேன்.

    இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது கலசங்கள் எடுத்துச் செல்ல அமைத்த சாரம், யாகசால கூடங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் விசாரித்து தேர்போகி மாடசாமி கோவிலை சேர்ந்த கர்ணன், சாமிநாதன், மோகன், நாகேந்திரன், சுகா, முருகன், தட்சிணாமூர்த்தி, ஈஸ்வரன், வெள்ளைச்சாமி, வெங்கடேஷ், ராஜ்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×