search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு நிதி"

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார்

    இரணியல் :

    திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு தலக்குளம் புதுவிளையில் உள்ள அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து தரைத் தளம், மேல் தளம் என அங்கன்வாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரீத்தம்மாள், 13-வது வார்டு கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஐய்வசந்த் எம்.பி புதிய கட்டிடத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சுழி அருகே ரூ.18 லட்சத்தில் சமுதாய கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பரளச்சி கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி வரவேற்றார்.

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபாணி ,திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மினி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், பரளச்சி ஊராட்சி மன்றத்தலைவர் நாகு (எ) கிச்சான், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×