search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு குழு கூட்டம்"

    • மேட்டூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில் மாதாந்திர பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு விதைப்பண்ணையில் மாதாந்திர பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம், சேலம் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏத்தாப்பூர் மர வள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் வெங்க டாசலம், கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்கு னர் ராஜகோபால், காடை யாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகரா ஜன், வேளாண் அலுவலர் மாநில திட்டம் சுதாகர், வேளாண் அலுவலர் பண்ணை நிர்வாகம் சந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ஆய்வுக்கு முன்னதாக இணை இயக்குனர் சீரங்கன் விதைப் பண்ணையில் தற்போது 15 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள ராகி, 4 ஏக்கரில் பயிர் செய்யப்பட் டுள்ள சோளம், 5 ஏக்கரில் பயிற்சி செய்யப்பட்டுள்ள பச்சைப்பயிர், 20 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள உளுந்து ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பயிர் வகை கள் மாவட்டத்தில் உள்ள 20 வேளாண்மை மையங்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ×