search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளைக்காய்ச்சல்"

    • விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்
    • வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு உறுதிமொழி

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    கல்லூரி முதல்வர் செல்வி தலைமை தாங்கி விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் தற்காலத்தில் கொள்வது குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதி மொழியை வாசித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கவுரி வெலிங்கண்ட்லா, குடியிருப்பு மருத்துவர் இன்பராஜ் மற்றும் சமூக மருத்துவ துறை டாக்டர் பாலாஜி, மணிமேகலை, நர்சுகள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    காய்ச்சல் இருந்தால் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்க்கான லெப்டோஸ்பைரோசிஸ் , ஸ்கரப்டைபஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். நாய் , பூனை போன்ற விலங்குகள் கடிக்கும்போது வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும் .

    கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கொசுவலை மற்றும் கொசுவிரட்டிகளை உபயோகப்படுத்த வேண்டும்.

    வீட்டிலும் மற்றம் சுற்றுப்புறத்திலும் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

    ஸ்கரப்டைபஸ் மற்றும் குரங்குகாய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு தகுந்த பாதுகாப்பின்றி காடுகளில் நுழைவதையும், தகுந்த பாதுகாப்பின்றி புதர் மற்றும் புல்வெளிகளில் ஓய்வு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ×