search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி தாக்குதல்"

    • இல்லத்தில் உள்ள ஊழியர்கள் மூதாட்டிகளை தாக்குவது உறுதி செய்யப்பட்டது.
    • முதியோர் இல்ல நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் ஒரு முதியோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு மூதாட்டிகள் தாக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட சமூக நல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இந்த புகாரின் அடிப்படையில் சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு இருந்த மூதாட்டிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது இல்லத்தில் உள்ள ஊழியர்கள் மூதாட்டிகளை தாக்குவது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி கூறியதாவது:-

    சமூக நலத்துறையில் அனுமதி பெறாமல் இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்தை நடத்தி வந்த விஜயலட்சுமி மற்றும் தங்கியிருந்த மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.உணவை கீழே கொட்டியதற்காக மூதாட்டி தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த இல்லத்தில் 8 மூதாட்டிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வேறு இல்லத்துக்கு மாறுவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

    முதியோர் இல்ல நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இல்லத்தை மூடிவிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தாசில்தார்-போலீசாருக்கு தகவல் அளித்து அடுத்த கட்டமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படும் முதிய பெண்கள் 14567 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேம்பாக்கம் ரெயில்வே சாலை அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவர் கோமளா (வயது65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கோமளா தூங்கினார். அதிகாலையில் அவர் நடை பயிற்சி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோமளா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்த போது கோமளா ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் தாக்கப்பட்டதால் வீங்கி இருந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சத்தம்கேட்டு கோமளா எழுந்ததும் அவரை மிரட்டி உள்ளனர்.

    பின்னர் வீட்டில் நகை-பணம் பெரிய அளவில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கோமளாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த நகை, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    மூதாட்டி கோமளா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொள்ளை கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×