search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முளைக்கொட்டு"

    • முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது.
    • ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் பிள்ளைக்காத்த காளியம்மன், கோட்டைமுனி கருப்பணசாமி கோவிலில் 2-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா தர்மகர்த்தா சரவணன் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில் சமயராஜ், முனியாண்டி தலைமையில் ஒயிலாட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு இடையர் வலசை சக்தி வடிவேல் முருகன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் பிள்ளைக்காத்த காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பொதுமக்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.

    கருப்பணசாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களின் சார்பில் அன்னதானமும் நடந்தது.அம்மன் கரகம் தென் கடற்கரைக்குச் சென்று கடலில் பூஜிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கோவில் கமிட்டி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்கி, ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    ×