search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்"

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 2349 கன அடி நீர் வரை தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.

    இதனால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழைப்பொழிவு குறைந்ததால் வேகமாக உயர்ந்து வந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது குறைந்த அளவு நீர்வரத்தால் பெரிய அளவில் உயரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.13 அடியாக உள்ளது. 152 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.55 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.2, தேக்கடி 0.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×