search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullaiperiyar dam water level"

    • இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.
    • பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. 115 அடியில் இருந்த அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 120 அடியை எட்டியது.

    ஆனால் தற்போது மழையின் தாக்கம் குறைந்து ள்ளதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 50.13 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. வரத்து 778 கன அடி. திறப்பு 356 கன அடி. இருப்பு 2628 மி.கன அடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2010 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.36 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.2, தேக்கடி 1.6, கூடலூர் 1.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.8, போடி 2.6 வைகை அணை 4, சோத்து ப்பாறை 3.5, மஞ்சளாறு 9.8, பெரியகுளம் 9, வீரபாண்டி 3.4, அரண்மனைபுதூர் 8, ஆண்டிபட்டி 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 2349 கன அடி நீர் வரை தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.

    இதனால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழைப்பொழிவு குறைந்ததால் வேகமாக உயர்ந்து வந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது குறைந்த அளவு நீர்வரத்தால் பெரிய அளவில் உயரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.13 அடியாக உள்ளது. 152 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.55 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.2, தேக்கடி 0.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது.
    • அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி யில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.

    இதனால் வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மழையளவு

    பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீரபாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு 646 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. மழை தாமதமாகி வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • 2-ம் போக நெல்சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையில் சாரல்மழை மட்டுமே பெய்து வருகின்றது.

    மேலும் முல்லைபெரியாறு அணைநீர்மட்டம் 135.20 அடியில் உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி நவம்பர் 4-ந்தேதிக்கு பின்னர்தான் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் தேக்க முடியும். எனவே பருவமழையை கருத்தில் கொண்டு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

    இதனால் மின்உற்பத்தி நிலையத்திலும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு 646 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1500 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை தாமதமாகி வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2-ம் போக நெல்சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. 1519 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 60 கனஅடிநீர் உபரியாகவும், 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×