search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகையிடும் போராட்டம்"

    • தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×