search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை கட்டிட தீ விபத்து"

    • விபத்தில் 8, 12-வது மாடி வீட்டில் இருந்த ஏ.சி. போன்ற மின்சாதனங்கள், வயர், நாற்காலிகள், படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின.
    • தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக குடியிருப்புவாசிகள் காயமின்றி உயிர் தப்பினா்.

    மும்பை:

    மும்பை கிரான்ட்ரோடு பகுதியில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி சாலையில் தவால்கிரி என்ற 22 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில் கட்டிடத்தின் 8 மற்றும் 12-வது மாடியில் உள்ள வீடுகளில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து கரும்புகை ஜன்னல் வழியாக வெளியேறியது.

    கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து குடியிருப்பில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் பலர் உள்ளே சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கட்டிடத்தின் 15, 21 மற்றும் 22-வது மாடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி தவித்த 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் கட்டிடத்தில் எரிந்த தீயை வீரர்கள் போராடி அணைத்தனா்.

    விபத்தில் 8, 12-வது மாடி வீட்டில் இருந்த ஏ.சி. போன்ற மின்சாதனங்கள், வயர், நாற்காலிகள், படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக குடியிருப்புவாசிகள் காயமின்றி உயிர் தப்பினா். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 22 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×