search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்திரை"

    • தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    • இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

    பலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.

    வறட்டு இருமல் பிரச்சனை குணமாகும். தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வைரஸ் கிருமி தொற்று வராமல் தடுக்கும்.

    செய்முறை

    விரிப்பில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஆள்காட்டி விரல், நடு விரலை மடக்கி உள்ளங்கையில் தொடும்மாறு வைக்கவும். மோதிர விரல், சுண்டு விரல் கட்டை விரலை தொட்டு கொண்டு இருக்குமாறு செய்யவும்.

    இந்த முத்திரையை காலை, மாலை இருவேளையும் 5 முதல் 10 நிமிடங்கள் அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் தான் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

    • மூட்டுகளில் நாள்பட்ட வலிக்கு, இந்த முத்திரையை தவறாமல் பயிற்சி செய்யுங்கள்.
    • இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

    வயதானவர்களின் நிரந்தரப் பிரச்சனை, கை, கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.

    செய்முறை :

    வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

    பலன்கள்: முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.

    இந்த முத்ரா மூட்டுகளில் ஆற்றலை சமநிலைப்படுத்த உதவுகிறது. உடலில் எங்கும் வலியுள்ள மூட்டுகளில் பயனுள்ளதாக இருக்கும். மூட்டுகளில் நாள்பட்ட வலிக்கு, இந்த முத்திரையை தவறாமல் பயிற்சி செய்யுங்கள்.நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள், நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார வேண்டியவர்கள் அல்லது நீண்ட நேரம் நிற்க வேண்டியவர்கள் இந்த முத்திரையை தினமும் 15 நிமிடங்கள் 3-4 முறை செய்ய வேண்டும்.

    • அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
    • உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

    நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

    செய்முறை

    கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.

    இந்த முத்திரையை தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

    மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.

    ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.

    முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

    பலன்கள்

    உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.

    சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.

    வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.

    எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.

    நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.

    வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும். வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும். மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்.

    • அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
    • மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளரின் செயல்முறை ஆணையின்படி கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்க்கு காப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரது (நகரம்) தஞ்சாவூர் அரசு சேவை இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000 ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தஞ்சாவூர் (நகரம்) பெயரிலும் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் (ஊரகம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ5,000-க்கான காப்புத்தொகையினை தஞ்சாவூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (ஊரகம்) பெயரிலும்,

    ஒரத்தநாடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000/ ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ஓரத்தநாடு) பெயரிலும், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்டத்தொழில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000 ற்கான காப்புத்தொகையினை பொது மேலாளர் மாவட்டத் தொழில் மையம் தஞ்சாவூர் பெயரிலும், எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்கான காப்புத்தொகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தஞ்சாவூர்,பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000-க்கான காப்புத் தொகையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் பெயரிலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் விலைப்புள்ளியுடன் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுலகங்க ளில் தொடர்புடைய அலு வலர்களால் திறக்கப்படும்.

    உறையின் மீதுஎந்த வாக னத்திற்கான விலைப்புள்ளி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏல அறிவிப்பு நாள் மற்றும் தேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்திரைகளை சரியான படி செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.
    • ஜீரண சக்தி அதிகரித்து சிறுகுடல் நோய்கள் நீங்கும்.

    யோகாவில் உள்ள சில முத்திரைகள் நமது உடலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவல்லது. தற்போது மலச்சிக்கலை தீர்க்கும் திரிகோண முத்திரையை பார்போம்.

    திரிகோண முத்திரை மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி விரல்களை இணைத்து 15 நிமிடங்கள் தினமும் செய்ய தீராத மலச்சிக்கல் பிரச்சனை தீரும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் ஜீரண சக்தி அதிகரித்து சிறுகுடல் நோய்கள் நீங்கும்.

    இரண்டு கைகளில் உள்ள கட்டை விரல்களை படத்தில் காட்டியுள்ளவாறு இணைத்து சுமார் 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் சிறுகுடல் நோய்கள் நீங்கும்.

    முத்திரைகளை சரியான படி செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். தவறாக செய்யும் பட்சத்தில் உரிய பலன் கிடைக்காது.

    • தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    • செய்து பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். தலைவலியால் அவதிப்படுவோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. சிலருக்கு தைலம் தேய்த்தாலும் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அந்த நேரத்திற்கு மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து தலைவலி ஏற்படும் பட்சத்தில் உரிய மருத்துவரை ஆலோசித்து, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் வீட்டில் இருந்தபடியே அதற்குரிய யோக முத்திரைகளை செய்தால் நிரந்தர பலன்களை பெறலாம்.

    அபானவாயு முத்திரைப் போலவே பட்சி முத்திரையும் தலைவலியை போக்கும் தன்மை கொண்ட முத்திரை ஆகும். இந்த முத்திரை செய்வது மிக எளிதுதான்.

    பட்சி முத்திரை செய்தும் தலைவலியை விரட்டலாம். இந்த முத்திரை செய்வது மிகவும் எளிது. ஆள்காட்டி விரலை சற்று மடக்கி, பெருவிரல் நுனியோடு இணைக்கவும். மற்ற மூன்று விரல்களையும் உள்ளங்கையில் சேருமாறு மடக்கி கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.

    இந்த முத்திரை தலைவலி நீக்கும் அருமையான முத்திரை ஆகும். செய்து பாருங்கள் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்.

    • முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும்.
    • தினமும் பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது. உடல் சூடு ஒரு காரணம், பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம். பரம்பரை, பரம்பரையாக இது ஒரு வியாதியாக சிலருக்கு இருக்கும்.

    இதற்கு நாம் சில குறிப்பிட்ட முத்திரைகள், யோகப்பயிற்சிகள் எடுத்து சரி செய்ய முடியும். முழுமையான தீர்வு காண சற்று காலம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பயின்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம். முடி உதிர்வு பிரச்சனைக்கு நம் விரல்களிலேயே யோகமுத்திரை வடிவத்தில் ஒரு எளிமையான தீர்வு இருக்கிறது. ஒருவருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய, இரண்டு விதமான முத்திரைகள் உள்ளன. அவற்றை தினமும் பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்!

    பிரசன்ன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் படத்தில் உள்ளதுபோல் சேர்ந்திருக்கட்டும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் செய்யவும். அவசர படாமல் நிதானமாக ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    நேரம் கிடைக்கும் பொழுது இந்த முத்திரையை கை விரல் நகங்களை ஒன்றையொன்று உராயும் படி லேசாக பத்து முறைகள் தேய்க்கவும். ஒரு நாளில் மூன்று முறைகள் செய்யவும்.

    லிங்க முத்திரை: எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும். இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம் மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும். நெல்லிப்பழம் சாப்பிடவும். அதி மதுர பொடி உணவில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் எடுக்கவும். மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும். கடுக்காய் சூர்ணம் ஒரு வேளை எடுக்கவும். முளைகட்டிய வெந்தய சாதப்பொடி உணவில் எடுக்கவும்.

    எப்பொழுதும் அதிக அளவு சிந்தனை செய்ய வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். ஒரு நாளில் பத்து முறைகள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இது போன்று செய்யவும்.

    • மூச்சு விடுகிற சக்தியை அதிகரிக்கும்.
    • ரத்த ஓட்டம் சீராக செயல்படும்.

    தாரண சக்தி முத்திரை தியான நிலையில் அமர்ந்து இரண்டு கைகளிலும் கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலை இணைத்து மற்ற மூன்று விரல்களையும் நீட்டி தினமும் மூச்சை அடக்கி 5 நிமிடம் செய்ய வேண்டும்.

    இந்த முத்திரை செய்வதால் பிராண சக்தி அதிகரிக்கும். மூச்சு விடுகிற சக்தியை அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராக செயல்படும், பிராண வாயு நுரையீரலுக்கு அதிகம் கிடைக்கும். இந்த முத்திரையை மூச்சை அடக்கி தான் செய்யவேண்டும்.

    • தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் குணமாகும்.
    • அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யக்கூடாது.

    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து நமது பெருவிரலின் நுனி நடுவிரல் நுனியையும், மோதிர விரல் நுனி நடுவிரல் நுனியையும், சிறு விரல் நுனி மோதிர விரல் நுனியையும் தொட்டுக்கொள்ளவேண்டும். ஆள்காட்டி விரல் வளையாமல் நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். படத்தில் பார்க்கவும்.

    இது இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் போல் காணப்படும். அதனால் இதை வஜ்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த முத்திரை பயிற்சியை குறைந்த பட்சம் 5 நிமிடங்களும் அதிக பட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். செய்து முடித்த பிறகு தலையின் முன் பக்கம் பின் பக்கம், கழுத்துப்பகுதி, பிடரி, இலேசாக அழுத்தத்துடன் தடவிக்கொடுக்கவேண்டும்,.

    நன்மைகள்

    * உடல் உள் உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது.

    * உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    * இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.

    * வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

    * குறைந்த இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் நோய் குணமாகும்.

    * மன அமைதி உண்டாகும்.

    * தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் குணமாகும்.

    * தீய பழக்கங்கள் அதாவது புகை பிடித்தல், மது பழக்கம், புகையிலை உபயோகித்தல் நாளடைவில் படிப்படியாக குறைந்து அதிலிருந்து விடுபடுவார்கள்.

    * இரத்த ஓட்டம் நன்றாக இருப்பதால் உடல் உறுப்புகள் செயல்பாடுகள் நன்றாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

    * மன அழுத்தம் குறையும்.

    * அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

    • வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீருகின்றன.
    • தொப்புளைச்சுற்றியுள்ள பகுதிகள் நலமடைகின்றன.

    செய்முறை :

    ஒவ்வொரு கையின் ஆள்காட்டி விரலின் நுனியை மற்றொரு கையின் நடுவிரலுடனும், ஒவ்வொரு கையின் மோதிரவிரல் நுனியை மற்றொரு கையின் சிறுவிரலுடனும் வைத்து, இருகட்டை விரலையும் ஒன்றையொன்று தொடுமாறு ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே சுரபி முத்திரை ஆகும். கட்டைவிரல் எந்த விரலையும் தொடக்கூடாது.

    பலன்கள் :

    நோய்வரும்முன் தடுப்பதற்கு இம்முத்திரை பயன்படுகிறது. எந்த நோயையும் தீர்க்கவல்லது. மனம் சுத்தமடைகிறது.

    வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீருகின்றன. தொப்புளைச்சுற்றியுள்ள பகுதிகள் நலமடைகின்றன. சுரபிகள் தூண்டப்படுகின்றது.

    உடலை நலமுடனும், பலமுடனும் இருக்கச்செய்கிறது. ருமாட்டிசம், ஆர்த்ரிட்டீஸ் நோய்களுக்கு நல்லது. இம்முத்திரையில் ஆள்காட்டி விரல் நுனி, நடுவிரல் நுனியுடன் சேர்வதால் வாயு, ஆகாயம் இவற்றின் சக்திகள் இணைகின்றது.

    • உயிர் காக்க உதவும் முத்திரை இது.
    • வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

    இந்த முத்திரை படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும். இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு 'ம்ருத்யூ சஞ்சீவி' எனப் பெயர். 'ம்ருத்யூ' என்றால் மரணம். 'சஞ்சீவி' என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, 'மரணமில்லாதப் பெருவாழ்வு' என்பது இந்த முத்திரையின் பெயர்.

    செய்முறை :

    வலது கை: ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.

    இடது கை: கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள் : படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

    உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும். வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும். 40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

    கட்டளைகள் : தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம். இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும்.

    முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம். அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

    உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

    • உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும்.
    • எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

    செய்முறை :

    இரு கைகளின் விரல்களை முதலில் மடக்கவும். ஆள்காட்டி விரல்களை மட்டும் வளைத்து ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். பின் இரு கட்டைவிரல்களையும் ஆள்காட்டி விரலுடன் நிமிர்ந்த நிலையில் இணைக்கவும். மணிக்கட்டுக்கு மேல் உள்ள கைகளின் கீழ்பகுதிகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் மடக்கியபடி இருந்தால் போதும். இந்த மூன்று விரல்களும், வலது கை, இடதுகை, விரல்கள் இணையாமல் இடைவெளியுடன் இருக்க வேண்டும். இம்முத்திரையை நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.

    பலன்கள் :

    உடலிலுள்ள அசுத்தம் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். இறைசிந்தனை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து உயர்வான எண்ணங்கள் உருவாகும். பற்று பாசம் குறையும்.

    ×