search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் தொலைநோக்கு பார்வை"

    • சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையத்தில், மினி டைடல் பார்க் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலுள்ள இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, முதல்கட்டமாக திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.இந்த பூங்காக்கள் செயல்பட துவங்கும்போது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, அவர்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். முதல்வரின் தொலைநோக்குப்பார்வையில்இது மைல் கல்லாக அமையும் என்றார். 

    ×