search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலூர் ஊராட்சி"

    • முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.
    • அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்களை பற்றி விளக்கி பேசினர்.

    சாத்தான்குளம்:

    முதலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், தாசில்தார் தங்கையா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லெனின், உதவி வேளான்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், முதலுர் கனரா வங்கி மேலாளர் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார்கள்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்கள் மனுக்கள் பெற்றுக்கொண்டனர். பொது மக்கள் திராளாக கலந்து கொண்டனர். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசாணமுத்து, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×